ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில் காலியாக உள்ள ஓதுவார், பரிசாரகர் மற்றும் சுயம்பாகி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 05.07.2024 |
கடைசி தேதி | 02.08.2024 |
பதவியின் பெயர்: ஓதுவார்
சம்பளம்: மாதம் Rs.11,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய, அரசு, பிற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார பாடசாலை அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட துறையில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேவாரம் இசையுடன் பாடும் திறமை இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பரிசாரகர்
சம்பளம்: மாதம் Rs.13,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: சுயம்பாகி
சம்பளம்: மாதம் Rs.13,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் அல்லது https://hrce.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் என்கின்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படிவங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம், எண் 44, இராசப்பா செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் சேர்ப்பிக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சென்னை NIEPMD நிறுவனத்தில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000
இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000
மாதம் Rs.25000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது