10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை

10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை!

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு மருத்துவ உதவி, சட்ட உதவி, தங்கும் உதவி மற்றும் மனநல ஆலோசனை வழங்குவதற்கு இந்திய அரசின் சிறப்பு திட்டம் One Stop Centre  என்னும் மையத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சிவகங்கை
ஆரம்ப தேதி 18.12.2024
கடைசி தேதி 24.12.2024

பணியின் பெயர்: பாதுகாவலர் (Security)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி.

அரசு நிறுவனம் அல்லது அரசு சாரா நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 வருட பாதுகாவலர் பணியில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட சமூக நல அலுவல, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை – 630 561 என்ற முகவரிக்கு 24.12.2024 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *