WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாவலர்  பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூக நலத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் வேலூர்
ஆரம்ப தேதி 11.06.2024
கடைசி தேதி 20.06.2024

பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case worker)

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Master’s of Social Work, Counselling Psycology or Development Management.

பதவியின் பெயர்: பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)

சம்பளம்: மாதம் Rs.10,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8வது தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி / தோல்வி.

பதவியின் பெயர்: பாதுகாவலர் (Security Guard)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8வது தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி / தோல்வி.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://vellore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், 4வது மாடி, B பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர் – 09.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

தேனி மாவட்ட One Stop Centre வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs.35,000

10ம் வகுப்பு படித்திருந்தால் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

ஷேர் செய்ய

Leave a Comment