திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

WhatsApp ChannelJoin Now

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் (SC) பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,900 முதல் ₹58,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 28.09.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்திருவாரூர் மாவட்டம்
ஆரம்ப தேதி 28.08.2026
கடைசி தேதி 28.09.2025

பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)

New Job👉  10th, 12th, ITI, Degree படித்தவர்களுக்கு சாகித்ய அகாடமியில் வேலை! Junior Clerk, MTS, Driver உள்ளிட்ட பணிகள் | சம்பளம் ₹18,000 - ₹2,08,700

சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-

காலியிடங்கள்: 01 ஆதி திராவிடர்(SC)

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

i) ஆதி திராவிடர் (SC) – 18 to 37 வயது

ii) மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு

இன்றைய வேலைவாய்ப்பு Click here

iii) முன்னாள் இராணுவ வீரர் – 18 to 55 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.50/-

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2026, மாலை 5.45 மணி

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

விண்ணப்பிக்கும் முறை?

  1. விண்ணப்பப்படிவம் https://thiruvarur.nic.in என்ற திருவாரூர் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 28.09.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரிலோ / பதிவஞ்சல் வழி மட்டுமே கீழ்க்காணும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  3. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், ஊராட்சி ஒன்றியம், திருவாரூர்
  4. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று, வயது ஆதார் சான்று ஆகியவைகளுக்கு ஆதாரத்தின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
  5. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை Block Development Officer (B.Pt.) Thiruvarur என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அதனை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  6. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  7. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் & தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
New Job👉  10ம் வகுப்பு போதும்! ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைClick here
Share this: