TNHRCE Pattinathar Temple Recruitment 2025

8வது படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 25.09.2025
கடைசி தேதி 25.10.2025

1. பதவி: அலுவலக உதவியாளர் 

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பதவி: சுயம்பாகி

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும். மற்றும் திருக்கோயிலின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப நெய்வேத்திய மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். மற்றும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

3. பதவி: காவலர்

சம்பளம்: மாதம் ரூ.10,000

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

4. பதவி: தோட்டவேலை

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டினத்தாரர் திருக்கோயில், அலுவலக இருப்பு:- அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர் சென்னை-19 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2025 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *