சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 01 |
| பணியின் பெயர் | கணக்காளர் |
| பணியிடம் | சென்னை |
| விண்ணப்பம் தொடங்கும் தேதி | 13.03.2026 |
| கடைசி தேதி | 23.03.2026 |
பதவி: Accountant (கணக்காளர்)
சம்பளம்: மாதம் Rs.18,536/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல்/ கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொருத்தமான துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவமும் கணினி திறன்கள் மற்றும் Tally அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.03.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான
https://chennai.nic.in/ இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 23.03.2026 திங்கள் கிழமை மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை – வடக்கு, எண்:300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ் சென்னை – 600010 என்ற முகவரியில் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய அறிவுரை
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- கடைசி தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
- விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் | Click here |